Search This Blog

Saturday 17 March 2018

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு

திருநெல்வேலி: நெல்லையில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு , அதிக விளக்கு வெளிச்சம் காரணமாக கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடந்தது. விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்டு விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். விழா முடிந்த நிலையில், இன்று காலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் மற்றும் தண்ணீர் வந்துள்ளது. 

இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற பலரும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். முன்னதாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவர்களுக்கு லேசான பாதிப்புதான், அதிகளவில் பாதிப்பு இல்லை. இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment