Search This Blog

Monday, 8 January 2018

ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள போக்குரவத்து தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்பிவிட்டால் நடவடிக்கை இல்லை - அமைச்சர்

சென்னை: ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள போக்குரவத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க இன்று வரை அவகாசம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. தற்போது தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு வர அரசு அழைத்துள்ளது. அவர்களுக்காக இன்று வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் இன்று பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் பஸ்சை பாதியில் நிறுத்திவிட்டு சென்றவர்கள் , பஸ் கண்ணாடிகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment