Search This Blog

Wednesday, 28 February 2018

எங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவியுங்கள்... ஏர்செல் நிறுவனம் திடுக்கிடும் மனு!

சென்னை: தங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவிக்கும்படி ஏர்செல் நிறுவனம் கோரிக்கை வைத்து இருக்கிறது. இழப்பும் கடனும் அதிகமாக இருப்பதால் இப்படி அறிவிக்கும்படி ஏர்செல் நிறுவனம் கோரியுள்ளது.
ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த வாரம் சில நாட்கள் பலர்க்கும் எடுக்கவில்லை. இதனால் சிலர் வேறு மொபைல் சர்விஸுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க இந்த பிரச்சனை இருந்தது. தற்போது ஏர்செல் இதற்கு தற்காலிக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலையில் இருந்து மீண்டும் டவர் பிரச்சனை வரும் என்று கூறப்பட்டது. டவர் நிறுவனத்துடன் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதால் மீண்டும் செயல்படாது என்று கூறப்பட்டு இருக்கிறது. இன்றும் மாலை 6 மணிக்கு மேல் இந்த பிரச்சனை ஏற்படும்.

கோரிக்கை

தற்போது தங்கள் நிறுவனத்தை திவால் ஆகிவிட்டதாக அறிவிக்க வேண்டும் என ஏர்செல் கோரிக்கை வைத்து இருக்கிறது. தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்திற்கு ஏர்செல் நிறுவனம் மனு கொடுத்து இருக்கிறது. இதில் விரைவில் முடிவெடுக்கப்படும்.

No comments:

Post a Comment