Search This Blog

Wednesday, 14 February 2018

பேராசிரியர் பதவிக்கு நாணயத்தை சுண்டி பூவா,தலையா போட்டு ஆட்களை நியமித்த அமைச்சர்

பஞ்சாபில் பேராசிரியர் பதவிக்கு நாணயத்தை சுண்டி பூவா,தலையா போட்டு ஆட்களை நியமித்த சம்பவம் நடந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றிற்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் பணி நியமனத்திற்கு பஞ்சாப் அரசு தேர்வாணையத்தின் மூலம் 37 பேர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்றவர்கள் அவரவர் இடங்களில் பணியை துவக்கினர். காத்திருந்த பட்டியலில் உள்ளஇரண்டு பேர் மட்டும் ஒரே இடத்திற்கு போட்டி போட்டனர்.தகவலறிந்த அம்மாநில தொழில்நுட்ப கல்வி அமைச்சர் சரண்ஜித்சிங், என்பவர் ஒரு இடத்திற்கு போட்டி போடும் இரு மனு தாரர்களையும் அழைத்து நாணயத்தை சுண்டி பூவா தலையா போட்டு பார்த்து தேர்வு செய்தார். அமைச்சரின் இந்த செயல் குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment