Search This Blog

Thursday, 25 January 2018

‛குளோனிங்' குரங்கு: அடுத்து மனிதன்?

ஷாங்காய்: குளோனிங் முறையில் குரங்குகளை உருவாக்கி சாதனை படைத்துள்ள சீன விஞ்ஞானிகள் மனிதர்களையும் குளோனிங் மூலம் உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஷாங்காய் பகுதியை சேர்ந்த விஞ்ஞானிகள் குளோனிங் முறையில், இரண்டு குரங்குகளை உருவாக்கியுள்ளனர். ஒன்று உருவாக்கப்பட்டு 8 வாரங்களாகிறது. மற்றொன்று 6 வாரங்களாகிறது. அவற்றிற்கு ஜோங் ஜோங் மற்றும் ஹூவா ஹூவா என பெயரிடப்பட்டுள்ளது. குளோனிங் முறையில் ‛டாலி' என்ற ஆடு உருவாக்கப்பட்ட முறையை பின்பற்றி, இந்த குரங்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், பாட்டீல் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

குரங்குகளை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், குளோனிங் முறையில் குரங்குகளை உருவாக்கப்பட்டது, மனிதர்களுக்கு உருவாகும் நோய்களுக்கு தீர்வு காண்பது குறித்த ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், மனிதர்களை குளோனிங் முறையில் உருவாக்குவதற்கான சாத்தியத்தையும் கொண்டு வந்துள்ளது. மனிதர்களை குளோனிங் முறையில் உருவாக்குவதற்கான தடைகள் உடைக்கப்பட்டுவிட்டன. பல தடைகள் உடைக்கப்பட்டு விலங்குகள் உருவாக்கப்பட்டதன் மூலம், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும், மருத்துவதுறைக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். குளோனிங் முறையில் உருவாக்கப்படும் விலங்குகள் ஆராய்ச்சிக்கு பெரிதும் பயன்படும். பல புதிய மருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முன்னர் அவற்றை இந்த விலங்குகளில் பயன்படுத்தி பார்க்க முடியும். இன்னும் நிறைய குரங்குகள் உருவாக்கப்பட உள்ளன எனக்கூறினர்.

No comments:

Post a Comment