Search This Blog

Sunday, 7 January 2018

15 ஆண்டுகால பிரச்னை; ஒரே நாளில் தீர்க்க முடியுமா?

சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் அவர்களின் 15 ஆண்டுகால பிரச்னையை ஒரே நாளில் தீர்க்க வேண்டும் என பிடிவாதம் பிடித்து போராடி வருகின்றனர் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

80% பஸ்கள் இயக்கம்:
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஊழியர்களை பணிக்கு திரும்ப சொல்லி ஐகோர்ட்டும் உத்திரவிட்டுள்ளது. பஸ் ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்த போதும், தமிழகம் முழுவதும் இன்று 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டது.

தவறான வழிநடத்தல்:
தொழிலாளர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். ஊதிய உயர்வு குறித்து போராடுபவர்களுக்கு சரியாக புரிதல் இல்லை. கடந்த 8 மாதங்களில் மட்டும் பஸ் ஊழியர்களுக்கு ரூ.2,175 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.350 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள தவணை தொகை வழங்கப்படும்.

ஒரே நாளில் தீர்வு?
போக்குவரத்து துறைக்கு வரலாற்றில் வழங்கப்படாத அளவுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தொழிற்சங்கங்கள் கோரும் 2.57 மடங்கு ஊதிய உயர்வுக்கு இணையானது. 15 ஆண்டுகால பிரச்னையை ஒரே நாளில் தீர்க்க வேண்டும் என பிடிவாதம் பிடித்து போராடுவது ஏன்? இவ்வாறு அவர் தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் கோரும் நிலுவை தொகை ரூ 7,000 கோடி அல்ல ரூ 5,000 கோடி தான் நிலுவையில் உள்ளது

No comments:

Post a Comment